Saturday, October 15, 2016

மூச்சுக்கலை

கால் என்பது காற்றை குறிக்கும். அதாவது மூச்சுக்காற்று. கலை என்பது அதனை தமது விருப்பத்திற்கு பழக்கும் வித்தையை குறிக்கும். இவ்வுலகில் நமது தமிழ் சித்தர்கள் தவிர வேறு எவரும் மூச்சுக்கலையைப் பற்றி விரிவாக கூறவில்லை எனலாம். அதிலும் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் என மொத்தம் எண்ணாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். (திருமூலர் மொத்தம் 8000 பாடல்கள் பாடியுள்ளதாக வள்ளலார் கூறுகிறார், அவற்றில் 3000 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன, மேலும் திருமூலர் 3000 ஆண்டுகள் அல்ல, 8000 ஆண்டுகள் பரு உடலுடன் வாழ்ந்துள்ளார்) இதிலிருந்து எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்கள் இந்த மூச்சுக்கலையை பற்றி அறிந்திருந்தனர் என்று ஒருவாறு சொல்லலாம். இவர் பாடிய திருமந்திரத்தில் இந்த மூச்சுக்கலையை பற்றி பல விஷயங்களை நாம் அறிய முடிகிறது. இவருடைய சமாதிஇடம்தான், சிதம்பரம் கோயில் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. திருமந்திரத்தை வள்ளலார் கூறும்போது, 'இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமெனில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' என்கிறார்.
இந்து மதங்களில், எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள் இந்துக்கள். அரசமரத்தடியில் இருக்கும் இருபாம்புகள் பின்னி நிற்குமாறு கல்லில் செதுக்கியிருப்பார்கள். அவை  நமது இடங்கலைமூச்சும்,     www.agathiyarjanachithar.in
+91-98428 46104 பிங்கலை மூச்சும் இணைந்த சுழுமுனை மூச்சை குறிக்கும் அடையாளம். அதாவது அரசமரத்தடியில் அமர்ந்து சுழுமுனை இயக்கத்தில் தியானம் செய்ய இறையருள் கிடைக்கும் என்பதனை புறத்திலே இவ்வாறு செய்திருக்கிறார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, முருகனின் காலடியில் இருக்கும் பாம்பு, விநாயகரின் வயிற்றில் சுற்றியுள்ள பாம்பு, விஷ்ணு பாம்பின்மேல் படுத்திருப்பது, கண்ணன் பாம்பின்மீது நடனம் ஆடுவது போன்ற அனைத்தும் ஒவ்வொரு தத்துவத்திலுள்ள மூச்சுக்காற்றை குறிக்கிறது என்பதை அறியவேண்டும். ஆனால் இந்துக்கள் அதன் உண்மைதெரியாமல் பால், பழம், முட்டை வைத்து குருட்டு பூஜை செய்து செய்துவருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும் இந்த நமது மூச்சின் நடனத்தையே குறிக்கும்.
நமது வள்ளலாரும் இந்த மூச்சுப்பயிற்சி பற்றி சில இடங்களில் தமது திருவருட்பாவில் கூறியுள்ளார். எனவே திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் சித்தர் கருத்துகள் போன்றவை கூறும் சர பயிற்சியினை பற்றிக் காண்போம்.
அதற்கு முன்னர் பொதுவாக மூச்சுக்காறு பற்றின உண்மையினை காணலாம். நமது நாசியின் வழியே உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும் காற்றுதான் மூச்சுக்காற்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறோம்? ஏன் நமக்கு ஒரு நாசித்துளைக்கு பதிலாக இரு நாசித்துளைகள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு கண்ணுக்கு பதிலாக இரு கண்கள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு காதுக்கு பதிலாக இரண்டுக் காதுகள் உள்ளன? என்று சிந்தித்தோமா?
இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும்   www.agathiyarjanachithar.in
+91-98428 46104 பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன! பிறகு ஏன் இரண்டு? ஒன்று பழுதானால் இன்னொன்றை பயன்படுத்திக்கொள்ள இறைவன் நமது உடலில் அமைத்த கூடுதல் பாதுகாப்பு (Step-in) அவையங்கள் என்று கூறலாம். ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்!  எப்படி?
நமது முன்னோர்கள், நமது இடதுபுறம் உள்ள நாசித்துவாரத்தை 'இடகலை' / 'சந்திரகலை' என்றும் வலது புறம் உள்ள நாசித்துவாரத்தை 'பிங்கலை' / சூரியக் கலை என்றும் கூறுவர்.
1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு.
2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.
3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை 'சரவோட்டம்' என்பார்கள். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் 'கலை' என்கிறோம்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்
இவை முன்னோர் வாக்கு. சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சர கலையை இயக்கத்தெரிந்தவனிடம் சரசம் என்று விளையாட்டுத் தனமாக நடந்துக்கொண்டால் சரம் கற்றவன் சீறி சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்துவிடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம், வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். எனவேதான் வடலூர் ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் நம்பெருமான், ஞானசபையினை சுற்றி  21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப் பொருத்தியுள்ளார்கள்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு   www.agathiyarjanachithar.in
+91-98428 46104 நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே. (திருமந்திரம்)
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள் என்று திருமந்திரம் கூறுகிறது.
ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு மிகுதியாகிறதோஅதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் 'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'! அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும். கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல் உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது. எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே அது இதற்காகத் தான்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'! (அ+உ+ம=ஓம்).
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்     www.agathiyarjanachithar.in
+91-98428 46104
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)
இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார் திருமூலர்.
ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (திருமந்திரம்)
இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேல். 1000 வருடங்கள் வயதுள்ள ஓர் கடலாமை சமீபத்தில் இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வருதே!
ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.
இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் 8000 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தனர். இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். ஆமைதான் உலகில் நீண்ட நாள் உயிர்வாழும் பிராணி என்று அறிவியலார்கள் தற்காலங்களில்தான் கண்டுபிடித்தார்கள்.
"எப்போதும் பயத்தோடு இருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கக்கூடாது. எப்போதும் மன உற்சாகத்தோடு இருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல் (ஓடுதல்), வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு (மூச்சுக்காற்று) அதிகமாகச் செலவாகாமல் ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்" (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம்339) www.agathiyarjanachithar.in
+91-98428 46104
'அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்' (திருப்புகழ்)
ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழவைக்கக்கூடிய உயிர்ச்சக்தியினை பெற்றிருக்கின்றன. இயற்கையாக  நாம் 120 வருடங்கள் வாழ்வதற்கும், குறை ஆயுள் அடையவும் நம் தந்தைதான் காரணம். எப்படி?
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே. (திருமந்திரம்)
விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிரைகள் காணமுடியும். ஆனால் மாத்திரை குறைய குறைய அதற்கேற்றாற்போல குழந்தையின் ஆயுளும் குறையும் என்கிறார் திருமூலர்.
மலம், ஜலம் தடைபடுமானால் என்ன செய்ய வேண்டும்?
மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.
மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும்.
ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல் வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333)
அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும்.
நமது விருப்பம்போல் சூரியக்கலையினையும், சந்திரக்கலையினையும் மாற்றுவது எப்படி?
நாம் இடதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் வலதுபக்கம் (சூரியக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். நாம் வலதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் இடதுபக்கம் (சந்திரக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். இது மிக மிக எளிமையான வழி. முயன்று பாருங்கள்.
கரு உற்பத்தி பற்றி வள்ளலார் கூறுவது என்ன?
ஆணிடத்திலிலுள்ள சுக்கிலத்திலும், பெண்ணிடத்திலிலுள்ள சுரோணிதத்திலும் கடவுள் ஆவி உள்ளது. கோசத்தின் முன் விஷம் (சத்தி) ஒரு பாகம், அதை அடுத்து பூதம் (அறிவு) ஒரு பாகம், அதற்கு மேல் அமுதம் (விந்து) அரை பாகம், என சுக்கிலம் இரண்டரை வவராகன் எடை அளவுக்கொண்டது. இவ்வாறு பெண்பாலிடத்தும் உண்டு.
முன்னுள்ள விஷ பாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்.
பூதம் வெளிப்பட்டால் வியாதி.
அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி.
கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார்.
இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும் விந்துவளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் இவற்றாலும் கர்ப்பம் இல்லை. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360)
குழந்தைகளின் பாலின உருவாக்கம் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?
சுரோணிதப் பையிடத்தில் (கர்ப்ப பை) மூன்றுமணி சேர்ந்த கொத்து ஒன்று வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து ஒன்று இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கின்ற காலத்தில், மூன்று சேர்ந்த கொத்தில் (வலது புறத்தில் உள்ளது) சம்பந்தப் பட்டால் ஆண் குழந்தையும், நான்கு சேர்ந்த கொத்தில் (இடது புறத்தில் உள்ளது) சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும்.
புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாக புணர்ந்தால் ஆணும், இடது புறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360)
சூரியக்கலை (பிங்கலை), சந்திரக்கலை (இடகலை) பற்றி வள்ளலார் கூறுவது என்ன?
1. சாதாரண ஜீவர்கள் சந்திரக்கலையில் இறப்பதும் பிறப்பதும் இயற்கை.
2. பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை.
3. சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம்.
4. தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்தக் கண்களில் செலுத்தல் வேண்டும்.
5. சூரியக்கலையில்தான் தியானம் செய்யவேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 398)
"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றின் தோன்றாமை நன்று."
என்பார் திருவள்ளுவர். ஒருவன் புகழோடு தோன்றுவது அவன் கையிலா இருக்கிறது. பிறக்கும்போது ஒன்றும் தெரியா குழந்தையாக பிறந்து அழுகிறோம். அக்குழந்தைக்கு, நாம் புகழோடு தோன்றினோமா, என்று எவ்வாறு தெரியும்?
இங்கு வள்ளலார் கூறியுள்ளதை சற்று பார்ப்போம். பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பார்கள் என்று கூறியுள்ளார். இது எவ்வாறு முடிகிறது? பக்குவர்கள் சூரியகலையில் இறப்பார்கள் என்கிறார் வள்ளலார். எனவே சூரிய கலையில் மூச்சு சரம் ஓடுகையில் ஒருவன் இறந்தால், அவனது மறுபிறவி கட்டாயம் சூரியகலை மூச்சு ஓட்டத்தில் ஆரம்பமாகும். இவ்வாறு சூரிய கலையில் பிறப்பவர்களே ஞானிகளாக ஆகமுடியும். எனவே நாம் நமது இந்த வாழ்நாளில் எப்போதும் சூரியக்கலையில் இருக்க பழகிக்கொள்வோம். முக்கியமாக இறக்கும் தருவாயை, நாம் உணர்ந்தால் சூரியகலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
அப்படியில்லையேல் சுத்த சன்மார்க்க நெறியில் சாகா வரம் பெற்று அடுத்துத் தோன்றாமை / பிறவாமை நன்று. என்பதே இக்குறளின் உண்மை பொருளாக உள்ளது.
சூரிய சந்திரக் கலைகள் இயற்கையாக நிகழும் நாட்கள் எவை எவை?
சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.
1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும்.
திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.
புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.
வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.
2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.
சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.
ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.
செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.
3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.
வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.
மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.
காரிய சித்திபெற சர ஓட்டம் பார்ப்பது எப்படி?
நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை கொடுக்கும்.
நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு.
12. உறங்குவதற்கு.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.
நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-
1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல்.
2. பொருள் வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு.
4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு.
10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது. சந்திர கலை பெண் தன்மையுடையது.
நமக்கு இருபுற நாசியிலும் (சுழுமுனை) மூச்சோட்டம் சில நேரங்களில் மட்டுமே செல்லும். அந்நேரத்தில் நாம் இறைநினைப்புடன் தியானம் செய்ய சமாதி நிலை கிட்டும். முனிவர்கள், சித்தர்கள், இறையாளர்கள், அருளாளர்கள் எப்பொழுதும் தமது கலை திறனால் தமது மூச்சினை சுழுமுனையில் நிறுத்தி யிருப்பார்கள். அப்போதுதான் இறைநிலை விரைவில் கிடைக்கும்.
யாருக்கேனும் சுழுமுனை ஓட்டம் இருப்பின் அவர்கள் மெளனமாக அமைதியாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்நேரத்தில் நாம் என்ன சொன்னாலும் அது பலிக்கும். நல்லது மற்றும் கெட்டது என்ற விக்தியாசம் இல்லாமல் எது சொன்னாலும் பலித்துவிடும். எனவேதான் மேற்கண்ட இறையாளர்கள் கடிந்து ஒரு சாபமிட்டால் அது பலித்துவிடும். சுழுமுனை அழிவின் சக்தியாக உள்ளது. அதீத சக்தியுடையது. ஆண், பெண் தன்மையற்ற அலி தன்மையுடையது. எனவே சரம் தெரிந்தவர்களிடம் நாம் விளையாட்டாக நடந்துக்கொள்ளக்கூடாது.
பெரும்பாலும் சுழுமுனை இயக்கம் பகல் 12 மணி அல்லது இரவு 12 மணிக்கு நடைபெறும். பாதி இரவில் பாவியேனை எழுப்பி தன்னுடன் இறைவன் கலந்ததாக வள்ளலார் கூறுவார். இறைவன் பாதி இரவில் வரக்காரணம், அந்நேரத்தில்தான் நமக்கு சுழுமுனை இயக்கம் நடைபெறும்.
இன்னும் சில உபாயங்களைக் காண்போம்.
1. எந்த ஒரு பயணத்தையும் சந்திரக்கலையில் துவங்கி சூரியக்கலை நடக்கும்போது செல்லவேண்டிய இடம் சென்றால் சென்ற காரியம் நிச்சம் வெற்றி.
2. சரம் ஓடும் பக்கம் "பூரணம்" என்று பெயர். சரம் ஓடாத பக்கம் "சூன்யம்" என்று பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில் ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம்.
3. சந்தரக்கலை நடக்கும்போது மேற்கும், தெற்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.
4. சூரியக்கலை நடக்கும்போது வடக்கும், கிழக்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.
5. மூச்சு உள்ளே இழுக்கும்போது வேண்டிய விருப்பம் நினைக்க அவை கைகூடும்.
6. மூச்சு வெளியே போகும்போது நமக்கு வேண்டாததையும் வெளியே தள்ளலாம். காமமே போ, சினமே போ, வறுமையே போ, சாவே போ என்பது போல சிந்தனை செய்ய அவை நடக்கும்.
சரஓட்டத்தின்படி தம்பதிகள், விரும்பிய குழந்தைகளை பெறுவது எப்படி?
'நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூப நமோ நம்' (திருப்புகழ்)
நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தை தெரிவித்த பின்புதான் இறைவனுக்கே வணக்கம் செலுத்துகிறார் அருணகிரிநாதர். ஏனெனில் இந்த நாத விந்து இயக்கங்கள்தான் இவ்வுலகத்திற்கு அச்சாரம். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பார் வள்ளலார். அப்படி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ இந்த நாதமும் விந்துவும் தேவைப்படுகிறது. இவைகள் இன்றி இந்த உலகம் இயங்காது. எனவேதான் நாதத்தை சக்தியாகவும், விந்துவை சிவனாகவும் உருவகப்படுத்தி இந்து மதம் பல கதைகளை சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நாதவிந்து சொரூபிகளே!
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்)
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாம் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம்)
கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பக்கம் மூச்சு சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும்.
மாறாக பெண்ணுக்கு வலப்பக்கம் மூச்சும் ஆணுக்கு இடப்பக்கம் மூச்சும் சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும்.
இரண்டு பேருக்கும் ஒரே பக்கம் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் அலியாகும்.
விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
எனவே, நாம் விரும்பும் குழந்தையினை பெற்றெடுக்கும் இரகசியம் நமது மூச்சில்தான் உள்ளது.
கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?
கருதரித்துவிட்டது, இனி நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் தம்பதிகளும், சொந்தங்களுக்கும் அதிர்ச்சிதரும் ஒரு விஷயம் இந்த கருச்சிதைவு என்பதாகும். இதி ஏன் ஏற்படுகிறது?
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே (திருமந்திரம்)
தேகசம்பந்தத்தின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
குறையுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது' என்பார் ஒளவை ஞானிகள்.
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (திருமந்திரம்)
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம்.
ஊமை குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் ஜலம் (சிறுநீர்) மிகுந்திருத்தலே காரணம்.
பார்வைதிறன் அற்று குருடனாக குழந்தைகள் பிறக்க காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம், ஜலம் (சிறுநீர்) சேர்ந்து மிகுந்திருத்தலே காரணம்.
பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே (திருமந்திரம்)
குழந்தைகள் குள்ளமாக இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.
குழந்தைகள் முடமாக (நொண்டி) இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை முடமாக இருக்கும்.
குழந்தைகள் கூனனாக இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் நீளமும் திடமும் ஒருசேர குறைந்து வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை கூனனாக இருக்கும்.
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார்.
பதஞ்சலி மகாரிஷீ⁠⁠⁠⁠

Sunday, September 25, 2016

உடலுறவு

                         பெண்கள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ..?

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அந்தளவு உடலுக்கும் ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் கிடைக்க உதவியாக இருக்கும். தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும்.
இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உடலுறவில் ஈடுபட வேண்டும். பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்..
மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வராது. தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாது. அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம்.
இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.
பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும்

வெள்ளப்படுதல் (eucorrhea

வெள்ளப்படுதல் (Leucorrhea)
========================

வெள்ளைப்படுகின்ற காலத்தில் பெண்கள் தங்களைத்தாங்களே வெறுத்துக்கொள்கின்ற நிலை உருவாகிவிடுகின்றது. அதனை சுத்தப்படுத்திக்கொள்ளக்கூட அசிங்கப்பட்டு ஒடுங்கிக்கிடக்கும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மனைவியை வெறுத்துப்பேசும் மன நிலைக்கு சென்று விடுகின்றார்கள். சிலருக்கு துர் நாற்றம் வேறு. சித்தரவதைதான்.

1. வெள்ளையோனிக்கு ஆனை நெருஞ்சி
*********************

இந்த பழமொழி ஆனை நெருஞ்சியின் மகத்துவத்தினை மக்களுக்கு உணர்த்துகின்றது. இதன் இலை, காம்பு, காய் இவைகளை சற்றே நசுக்கி பசும்பால் அல்லது நீரில் கலந்து கையினால் சிறிது நேரம் சுற்றிச் சுற்றித் துழாவிக்கொண்டிருந்தால், ஒரு விதமான குழகுழப்பான திரவமாக வெளிப்பட்டு, பிசுபிசுப்பான திரவம் உண்டாகும். இதனுடன் பனைவெல்லம் கலந்து குடிக்க வெள்ளைப்படுதல் பெண்களுக்கு நிற்கும். ஆண்களுக்கு நீர்க்கடுப்பு, கனவில் விந்து வெளியேறல் நீங்கும்.

பசும்பாலைவிட வெள்ளாட்டுப்பால் கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவ்வாறு கரைத்து குழகுழப்பான திரவத்தினை தினமும் குடித்துவர வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு நீங்கும்.

இதன் இலையை மட்டும் சூரணம் செய்து உணவுக்கு பின்பு 1 கிராம் வீதம் 3 வேளைகள் தினமும் பாலுடன் குடித்து வர வெள்ளைப்பாடு நீங்கும்.

முழுச்செடியையும் கழுவி மைபோல அரைத்து எருமைத்தயிருடன் பாக்களவு, தினமும் காலையில் 3 நாட்கள் சாப்பிட வெள்ளைப்பாடு நீங்குவதோடு, நீர் எரிச்சல்,தேக எரிச்சல் நீங்குவதோடு, இது சிறு நீரை வெளியேற்றுவதோடு சிறு நீரகத்தினை காக்கவும் கூடிய மிகச்சிறப்பான முலிகை ஆகும்.

2. பிரண்டை
********

முற்றிய பிரண்டைச் சாறு எடுத்து சம அளவு விளெக்கெண்ணெய் கலந்து குடித்து வருவது வெள்ளைப்பாட்டினை குணமாக்கும். பிரண்டைத் துவையல் தினமும் சேர்த்துவர வெள்ளைப்பாடு கட்டுப்படும்.

3. துத்தி
*****

துத்திப்பொடி மிகச்சிறந்த உடல் தேற்றி, இப்பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர உள்சூடு, மேகச்சூடு வெள்ளைப்படுதல் குணமாகும்.

4. கடுக்காய்
*******

விதை (கொட்டை) நீக்கப்பட்ட கடுக்காய் 10 எடுத்து 1 லிட்டர் நீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் சூடு ஆறிய பின்பு பெண் குறியை கழுவ வேண்டும். முதலில் சற்று கூடுதலான எரிச்சல் இருக்கும். அடுத்த நாள் எரிச்சல் குறையும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழுவிவர பெண்குறியில் வெள்ளைப்படுதலினாலான பெண்குறிப்புண், நமைச்சல் தீர்ந்துவிடும்.

5. வெள்ளை அருகு
**********

இதன் இலையை அரைத்து இரண்டு சுண்டக்காய் அளவு மோர் கலந்து சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நீங்கும். இத்துடன் மூலம், கிரந்து, சிரங்கு நீங்கும்.

6. ஆவாரம்
*******

இதன் சம்மூலத்தினை (அதாவது முழுச்செடி) இடித்துப்பொடி செய்து தேனுடன் கலந்து சுண்டைக்காய் அளவு காலையில் மட்டும் சாப்பிட்டுவர உட்சூடு, சுரம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகங்கள் போன்றவை தீரும்.

7. அருகம் புல்
*********

“பெரும்பாடு தீர்க்கும் அருகம்புல்” என்கின்ற பழமொழிக்கு ஏற்ப அருகம்புல் சாறு அருந்திவர பெரும்போக்கு நின்று, தேக திடகாத்திரம் உண்டாகும்.

8. பற்பாடகம்
********

இதன் சம்மூலத்தினை பறித்து நிழலில் உலர்த்தி, தேவையானபோது வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து தேனில் கலந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர பித்தம், காச சுரம், உள்மாந்தம், சீதவாத சுரம், கபம், ஆஸ்துமா போன்றவைகள் தீரும். வெள்ளைப்படுதல் முற்றிலும் நீங்கும்.

9. வால் மிளகு
*********

முதிராத உலர்ந்த காய் பயன்படுகின்றது. கார்ப்பு, வெப்பம் உண்டாக்கும். சிறு நீர் பெருக்கும், கோழையகற்றும், இத்துடன் வெள்ளைப்பாடு போக்கும்.

வால்மிளகுத்தூளை வெடியுப்புவுடன் சமமாக கலந்து கொடுக்க வெள்ளைப்படுதல் தீரும்

வால்மிளகு, அதிமதுரம், திப்பிலி, சிற்றரத்தை, கடுக்காய் இவைகளின் சூரணத்தினை சம எடை எடுத்து 15 மடங்கு நீர் விட்டு காய்ச்சி ¼ பாகமாய் குறுக்கி, வேளைக்கு 10 மி.லி 4 வேளை கொடுக்க அனைத்துவித இருமல், இழுப்புநோய் தீரும். நாட்பட்ட வெள்ளை, வெட்டை அகலும்.

10. கற்றாழை லேகியம்
************

கற்றாழை சோற்றினை ஏழு முறை நன்றாகக் கழுவி, 75 கிராம் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு, கற்கண்டு ¼ கிலோ வாங்கிக்கொண்டு, சோற்றுக்கற்றாழையை கல்வத்தில் இட்டு மைபோல அரைத்து மேற்படிச்சரக்குகளை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து, 100 கிராம் பசு நெய் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதனை தினமும் 5 கிராம் அளவு பசும் பாலில் உண்டுவர, தேகச்சூடு, வெள்ளைப்பாடு தீரும்.

Tuesday, August 16, 2016

அதர்வண வேத வசியம்

Girl, enchanted touch ituataiyotti pintutari faded (type 1 PAGODA weight)talaiccuruli intirakopapucci 10 kuliyanai insect moth 5 to 10 ippuli 5 pullamalKalvattittu karukki ghost cane juice and grind away these four jamam abresprecaterius Allon oath in a dryer on the tablet Be safe in the tablet division as long as his body is kept alive by eating tinpantankalilvaittu avanmelumtotarp7845998138

Facebook post: ஆண் பெண் வசிய மை விற்பனை October 16, 2015 · மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன்படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது.விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது. காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில்வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவுமுறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விடமூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும். திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவைகுறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்னபீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல்நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடுகலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்தமுடியும் என்று சொல்லப்படுகிறது. மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை,தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்குஇருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள் துர் தேவதைகள் யட்சிணிகள் மற்றும்பிரம்ம ராட்சசர்களைக்கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் மனைவிக்குள்பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு. சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும். இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன்அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமான பெண் அல்லது ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது. பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகைபொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.இதில் திலகம் என்பது நெற்றிஅல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும், உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது.

girls vasikaranam Mantra
Prayog For VashikaranMohini Mantra Prayog or Mohini Vashikaran Prayog is useful for husband, wife or love relationship only. In Mohini vashikaran mantra prayog energized food, drinks, sweet, clove and remedies has big role and without the complete and genuine method you cannot expect the changes in your partner. People always ask for clove vashikaran mantra, sweet vashikaran mantra, salt vashikaran mantra and vashikaran totke and remedies,Mohini Vashikaran Mantra, Most Powerful Mohini Vashikaran Mantra, Most Strong Mohini Vashikaran For Wife, Most Powerful Mohini Mantra Prayog For Husband, Guaranteed Mohini Vashikaran Mantra Prayog For Lover, Mohini Mantra For Wife, Mohini Mantra For Husband, Most powerful mohini vashikaran mantra prayog, mohini mantra for vashikaran, mohini vashikaran prayog, mohini vashikaran anusthan prayog here we want to declare any vashikaran mantra to energize food or drink if you use so before that you have to chant the mantra and get siddhi. In mohini mantra prayog and mohini vashikaran prayog you do the same here also. You charge different food and drink, clove, sweet etc by powerful mantra of vashikaran and offer beloved to eat or drink. Mohini mantra prayog has not only remedies of food and drink, here is a other part also which is tantric pooja, anusthan and yagna. Mohini vashikaran prayog is safest way of vashikaran without harm to get someone agree for love or to accept you. From mohini vashikaran vidya you can make your husband or wife happy from you and agree to love you.Different mohini vidya like, Mohini Tantra Prayog, Mohini Vidya Prayog, Mohini Mahaprayog, Mohini Vashikaran Anusthan, Mohini Kalp Vidya, Mohini Vashikaran Mantra Prayog. When you use these above mentioned all are mohini vidya rituals which people use for different purpose.Mohini Vashikaran Vidya people can use for good purpose. If you are true and genuine and your matter is showing youinnocent so your wish can be done by this vashikaran prayog. You can get your love back by mohini vashikaran, you can make your wife or husband agree to live with you by this method. This vashikaran is 100% tantric concept of vashikaran and in hawan and yagna some vedic rituals also included. Mohini vashikaran prayog is the one of strongest vashikaran rituals. It is very powerful and strong vashikaran prayog for love, husband and wife also.Some Easy Mohini Mantra Prayog For VashikaranOM NAMOH BHAGWATE SARWA LOKAAN MOHYE MOHYE SWAHAThis powerful mohini vashikaran mantra is for sarwalok vashikaran, this mantra if you recite daily at night 1000 times from spathik rosary continuously so you get the energy to attract other people when you are in front of them and to convince them by your words and to get them agree about you. You should keep 11 ghee lamp front of you, you should keep your face on north direction and you should avoid non veg, alcohol and sex, if using this mantra.
Some Easy Mohini Mantra Prayog For Vashikaran
OM NAMOH BHAGWATE SARWA LOKAAN MOHYE MOHYE SWAHA
This powerful mohini vashikaran mantra is for sarwalok vashikaran, this mantra if you recite daily at night 1000 times from spathik rosary continuously so you get the energy to attract other people when you are in front of them and to convince them by your words and to get them agree about you. You should keep 11 ghee lamp front of you, you should keep your face on north direction and you should avoid non veg, alcohol and sex, if using this mantra.
OM MOHINI DEVI WAJRESHWARI KAAM MALINI MUM PRIYANTAM AAKARSHAYE AAKARSHAYE SWAHA
This strong mahamohini aakarshan mantra is for people who involved into love relationship or if they are married couples. You should seat on east side, light ghee lamp in front and you should chant this mantra from blue sapphire rosary or blue crystal rosary 2021 times in a night. When doing the mantra, avoid non veg and alcohol. Also lord vishnu pooja, temple worship is most important when chanting for any purpose.
avanmelumtotarp7845998138